கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும் திருமங்கலாய் -சிவனாலம்.
கள ஆய்வுத்தொகுப்பு
கிழக்கிலங்கையில்
திருகோணமலை மாவட்டத்திற்கு இந்து சமய வரலாற்றில்தனிச்சிறப்புண்டு. அதிலும் சிவ
வழிபாட்டின் தொன்மை பெருமைக்கு நிகராக திருமங்கலாய்சிவனாலயமும் திகழ்ந்துள்ளது
என்பதை ஆலயத்தின் அழிந்த பாகங்கள், ஆலயத்தின்பெருமை கூறும் சாசனங்கள் ஆலய தலபுராணம் என்பன எடுத்துக்காட்டி
நிற்கின்றன.
மக்கள்இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல ஐதீகங்கள் நிலவிவருகின்றது. அவ்விதம் இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற சிலர்;ஒருபரம்பரை பரம்பரையாக செவிவழியாக கேள்வியுற்ற செய்தி அயோத்திலிருந்து திருகோணமலைக்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த சிங்கபூதரன் வரும் போது இலிங்கம் ஒன்றினைக் கொண்டு வந்து திருமங்கலாயில் வைத்து வழிபாடுஇயற்றினான்
எனவும்.அகஸ்தி முனிவர் அருகில் உளள் பிராந்தியத்தில் இலிங்கம் ஒன்றை வைத்து
சிவன்கோவில் ஒன்றை அமைத்ததாகவும் அதன் பின்னர் சிங்க பூதரன் திருமங்கலாயில்கோயில்
அமைத்தான் என்றும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இவ்வாறு அகத்தியர்ஸ்தாபனம் நடைபெற்ற இடத்தில்
பிரசித்திபெற்ற சிவனாலயம் ஒன்று இருந்தமைக்கானஆதாரங்கள் எம்மால் கள ஆய்வின் மூலம்
கண்டுகொள்ள முடிகின்றது.
இங்கு சிவலாயம் இருந்த இடத்தில் லிங்கம், நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர் அகஸ்திதேவர் கோயில், வாயில் கற்கள், கோமுகி, அபிஸேக வாசனைத் திரவியங்கள்அரைக்கும் முக்கூட்டுக்கல், வாசற்படிக்கற்கள், தூண்கள் போன்ற திருமங்கலாய்சிவனாலயத்தை ஒத்த எச்சங்கள் எம்மால் இனங்காண முடிகின்றது.
ஆனால் இவ்வாலய வரலாறு கூறும் தல புராணமானது இலங்கையில் கிழக்குப்பகுதியில் பல மன்னர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஆண்டு வந்தனர்கள் என்றும் இந்திய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிங்க பூதரன் என்பவன்அயோத்திலிருந்து இலங்கைத்துறை என்று சொல்லப்படும் இடத்தில் கப்பலில் வந்துஇறங்கினான் எனவும் அப்போது திருமங்கலாய் பகுதியில் ஆட்சிபுரிந்த எழில்வேந்தன் மகளாகிய திருமங்கையை திருமணம் செய்து திருக்கரைசயம்பதியில் அரண்அமைத்து நாட்டை ஆண்டு வந்தான் எனவும் அரண் அமைத்த இடத்திற்கு இரணியன்குன்று என்ற பெயர் காணப்பட்டதுஎனவும்இரணியன்கொட்டுஎனவழங்கப்பட்டுவருவதாகவும்இவ்வாறுசிங்க பூதரன் திருமங்கையாகியோரின் வழிபாட்டிற்காகதிருமங்கலாய் சிவன் கோயில் அமைக்கப்பட்டதாக திருக்கரைசைபுரம் கூறுகின்றது
. இவ்விதம் திருமங்கலாய் ஆலயம் அமைந்த பகுதியில்களஆய்வினைமேற்கொண்ட போது இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் ஆதாரமாகக்கொண்டு இவ்வாலயம் கி.பி 10ம் நூற்றாண்டில் வழிப்பாட்டில் இருந்தமையை உறுதியாகக் கூற முடிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆலயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆலயம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் ஆய்வின் போது கூரை ஓடுகள் பலவகையான மட்பாண்டங்கள் சிதைவுகள் சுடுமண் உருவங்கள் இனங்காண முடிந்ததுடன் இவ் மட்பாண்டங்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என இனம் காண முடிகிறது
இச்சான்றாதாரங்களின் மூலம் இவ்வாலயம் பல்லவ, சோழர் காலங்கட்கு முன்னரே மண், மரம், சுதை போன்றவற்றால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருக்கலாம் பின்பு பல்லவர், சோழர் காலத்தில் சமகாலத்திராவிடக்கலை மரபிற்கு உட்பட்டு ஆலயம் அமைக்கப்பெற்று இருக்கலாம் என்பதனை ஆலய அமைப்பு, கட்டுமானம், கலைமரபுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு தோற்றம் பெற்ற ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதுடன் கர்ப்பக்கிரகம் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பனவற்றோடு கோபுரங்களையும் கொண்டு ஆலயம் அமைக்கப் பெற்றிருந்ததோடு இதன் எழுந்தருளியாக கந்தலிங்கேஸ்வரர் என்ற திருவுருவம் அமைக்கப்பெற்று வழிபாடுகள் இயற்றப்பட்டவிளங்கியதுடன் ஆடி அமாவாசை தினத்திலும், மகர மாதத்திலும் தீர்த்தமாட கந்தலிங்கேஸ்வரப் பெருமான் அம்பாள் சமேதாராய் மகாவலி கங்கைக்கரைக்கு எழுந்தருழுவது வழக்கமாக காணப்பட்டதுடன் அதே நாள் அதே நேரம் அகஸ்தியரால் கட்டப்பட்ட ஆலயத்தின் எழுந்தருளியும் தீர்த்தமாட மககவலி கங்கைக்கரைக்கு வருவதும் இரு தெய்வங்களும் நேர் நேர் திசையில் சந்திக்கும் அந்தத் திருவிழா காட்சியை கண்கொண்டு பார்ப்பதற்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு வருவார்கள் என்று அடியார்களால் கூறப்படுவதுடன் ஆறுகாலப் பூசைகளும் பூசைகளும் நடைபெற்ற ஆலயமாக இவ்வாயம் திகழ்ந்திருந்தது.
ஆனால் 1985ற்குப் பின்னர் இப்பிராந்திய மக்கள் கொள்ளை நோயினால் இடம்பெயர்ந்தார்கள்
எனப்படுகின்றர். சிலர் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததால் இடம்பெயர்ந்தார்கள் என்ற
கருத்து மக்களிடையே காணப்படுகின்றது. இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்தமையால் ஆலயத்தைக்
காடு சூழ்ந்து கொண்டதுடன் ஆலயத்தின் பாகங்கள் கலையழிவுக் கொள்ளைக்காரர்களாலும்
திருடர்களாலும் சூறையாடிப்பட்டு அழிவுகளைச் சந்தித்து வந்துள்ள போது
கர்ப்பக்கிரகம் சிதைந்து விட்டது.
அர்த்தமண்டபம்சிதைவுற்றநிலையில்பாதுகாக்கப்பட்டதுடன் மகாமண்டபமும் ஆலயக்கட்டங்களும் ஆலய அத்திவார மண்டபத்தில் புதையுண்டு காணப்படுகின்றது.
இவற்றை நோக்கும் போது இங்கு ஒர் பெருங்கோயிலாக திருமங்கலாய் சிவன்
அமையப்பெற்றிருந்தது என அறியமுடிகின்றது .இவ்ஆலயம் அழிவடைந்த
போது இங்கிருந்த இலிங்கத்தையும் அம்பாளையும் திருவாளர் ஸ்ரீ தியாகராசா குருக்கள்
என்பவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் எடுத்துக்கொண்டு வெருகலம் பகுதியில்
சிறு கோயில் வைத்திருந்தார். பின்னர் இக் கோயில் பராமரிப்பற்றுப் போனதால்
இத்திருவுருவங்கள் மூதூர் பிள்ளையார் கோயிலில் சில காலம் வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் அடியவர் ஒருவரால் மட்டக்களப்பிற்கு வழிபட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறுகின்றனர்.
இவ்வாறு பிரமாண்டமாக அமையப்பெற்ற திருமங்கலாய் சிவன் பல்வேறு காரணங்களால் அதன் கட்டுமானம் திருவுருவங்கள் அழிவடைந்தாலும் அவற்றினை ஆதியம்மன் கேணி 217/T என்ற கிராமசேவகர் பிரிநிலைக்கு உட்படுத்தி மீளவும் காடுவெட்டி அழிந்த கற்களை சரிசெய்து வழிபாடுகள் இயற்றப்பட்டு வருகின்றது.
பூசை வழிபாட்டிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருமங்கலாயில் இன்றளவும் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தில் பத்தினியம்மன் மடையும் அது தவிர வைரவர் மடையும் மக்களால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இறைவழிபாடுகளில் ஈடுபட்டு சென்ற நூற்றாண்டுக் காலத்திலும் பல துறவிகள் இச்சிவன் கோயிலில் வந்துள்ளதாகவும் தங்கியிருந்ததாகவும்;; அறியக்கூடியதாகவுள்ளதுடன் இவர்களில் கிளிவெட்டியைச்சேர்ந்தபசுபதிச்செட்டியார்சாமியார்ஆகியோரைகுறிப்பிட்டுக்கூறலாம்.அத்துடன;;; செல்லத்துரை இந்தியாவைச் சேர்ந்த தவத்திரு குன்றங்குடி அடிகளாரும் திருமங்கலாய் வந்துவழிபாடியற்றியதாக இப்பிராந்திய மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியான வழிபாட்டிற்குரிய இடமாகமீண்டும் இவ்வாலயத்தை ஒரு மாற்றியமைப்பதற்கு முதற்கட்டமாக இவ்வாலய சூழல் சுத்தமாக்கப்பட்டு பின்னர் அங்கு சேதம் உற்றிருந்த பழைய ஆலயக்கட்டடத்தை செம்மைப்படுத்தி புதியதொரு சிவலிங்கம் ஒன்று நந்தியெம்பெருமானுடன் 2016.11.30ம் திகதி சமய முறைப்படி பிரதிட்டை செய்யப்பட்டதுடன் 2017.02.24 அன்று மகாசிவராத்திரி பூசைகளும் சிறப்பாக நடைபெற்றதுடன் இன்றைய சூழலில் பழமைப் போன்று ஒரு புதுப்பொலிவினைப் மக்கள்ஏற்படுத்தி இப்பிரந்தியம் முழுவதும் திருமங்கலாய் சிவனாலயத்தின் பழமையான இந்துபபண்பாட்டை பேணிவருகின்றார்கள்.