Sunday, March 26, 2023

 


கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம்.

கள ஆய்வுத்தொகுப்பு

 


கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கு இந்து சமய வரலாற்றில்தனிச்சிறப்புண்டு. அதிலும் சிவ வழிபாட்டின் தொன்மை பெருமைக்கு நிகராக திருமங்கலாய்சிவனாலயமும் திகழ்ந்துள்ளது என்பதை ஆலயத்தின் அழிந்த பாகங்கள், ஆலயத்தின்பெருமை கூறும் சாசனங்கள் ஆலய தலபுராணம் என்பன எடுத்துக்காட்டி நிற்கின்றன.

மக்கள்இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல ஐதீகங்கள் நிலவிவருகின்றது. அவ்விதம் இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற சிலர்;ஒருபரம்பரை பரம்பரையாக செவிவழியாக கேள்வியுற்ற செய்தி அயோத்திலிருந்து திருகோணமலைக்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த சிங்கபூதரன் வரும் போது இலிங்கம் ஒன்றினைக் கொண்டு வந்து திருமங்கலாயில் வைத்து வழிபாடுஇயற்றினான் எனவும்.அகஸ்தி முனிவர் அருகில் உளள் பிராந்தியத்தில் இலிங்கம் ஒன்றை வைத்து சிவன்கோவில் ஒன்றை அமைத்ததாகவும் அதன் பின்னர் சிங்க பூதரன் திருமங்கலாயில்கோயில் அமைத்தான் என்றும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இவ்வாறு அகத்தியர்ஸ்தாபனம் நடைபெற்ற இடத்தில் பிரசித்திபெற்ற சிவனாலயம் ஒன்று இருந்தமைக்கானஆதாரங்கள் எம்மால் கள ஆய்வின் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது.


இங்கு சிவலாயம் இருந்த இடத்தில் லிங்கம்
, நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர் அகஸ்திதேவர் கோயில், வாயில் கற்கள், கோமுகி, அபிஸேக வாசனைத் திரவியங்கள்அரைக்கும் முக்கூட்டுக்கல், வாசற்படிக்கற்கள், தூண்கள் போன்ற திருமங்கலாய்சிவனாலயத்தை ஒத்த எச்சங்கள் எம்மால் இனங்காண முடிகின்றது.

ஆனால் இவ்வாலய வரலாறு கூறும் தல புராணமானது இலங்கையில் கிழக்குப்பகுதியில் பல மன்னர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஆண்டு வந்தனர்கள் என்றும் இந்திய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிங்க பூதரன் என்பவன்அயோத்திலிருந்து இலங்கைத்துறை என்று சொல்லப்படும் இடத்தில் கப்பலில் வந்துஇறங்கினான் எனவும் அப்போது திருமங்கலாய் பகுதியில் ஆட்சிபுரிந்த எழில்வேந்தன் மகளாகிய திருமங்கையை திருமணம் செய்து திருக்கரைசயம்பதியில் அரண்அமைத்து நாட்டை ஆண்டு வந்தான் எனவும் அரண் அமைத்த இடத்திற்கு இரணியன்குன்று என்ற பெயர் காணப்பட்டதுஎனவும்இரணியன்கொட்டுஎனவழங்கப்பட்டுவருவதாகவும்இவ்வாறுசிங்க பூதரன் திருமங்கையாகியோரின் வழிபாட்டிற்காகதிருமங்கலாய் சிவன் கோயில் அமைக்கப்பட்டதாக திருக்கரைசைபுரம் கூறுகின்றது


.
இவ்விதம் திருமங்கலாய் ஆலயம் அமைந்த பகுதியில்களஆய்வினைமேற்கொண்ட போது இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் ஆதாரமாகக்கொண்டு இவ்வாலயம் கி.பி 10ம் நூற்றாண்டில் வழிப்பாட்டில் இருந்தமையை உறுதியாகக் கூற முடிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே ஆலயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆலயம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் ஆய்வின் போது கூரை ஓடுகள் பலவகையான மட்பாண்டங்கள் சிதைவுகள் சுடுமண் உருவங்கள் இனங்காண முடிந்ததுடன் இவ் மட்பாண்டங்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என  இனம் காண முடிகிறது

இச்சான்றாதாரங்களின் மூலம் இவ்வாலயம் பல்லவ, சோழர் காலங்கட்கு முன்னரே மண், மரம், சுதை போன்றவற்றால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருக்கலாம் பின்பு பல்லவர், சோழர் காலத்தில் சமகாலத்திராவிடக்கலை மரபிற்கு உட்பட்டு ஆலயம் அமைக்கப்பெற்று இருக்கலாம் என்பதனை ஆலய அமைப்பு, கட்டுமானம், கலைமரபுகள் எடுத்துக்காட்டுகின்றன.


 இவ்வாறு தோற்றம் பெற்ற ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதுடன் கர்ப்பக்கிரகம் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பனவற்றோடு கோபுரங்களையும் கொண்டு ஆலயம் அமைக்கப் பெற்றிருந்ததோடு இதன் எழுந்தருளியாக கந்தலிங்கேஸ்வரர் என்ற திருவுருவம் அமைக்கப்பெற்று வழிபாடுகள் இயற்றப்பட்டவிளங்கியதுடன் ஆடி அமாவாசை தினத்திலும், மகர மாதத்திலும் தீர்த்தமாட கந்தலிங்கேஸ்வரப் பெருமான் அம்பாள் சமேதாராய் மகாவலி கங்கைக்கரைக்கு எழுந்தருழுவது வழக்கமாக காணப்பட்டதுடன் அதே நாள் அதே நேரம் அகஸ்தியரால் கட்டப்பட்ட ஆலயத்தின் எழுந்தருளியும் தீர்த்தமாட மககவலி கங்கைக்கரைக்கு வருவதும் இரு தெய்வங்களும் நேர் நேர் திசையில் சந்திக்கும் அந்தத் திருவிழா காட்சியை கண்கொண்டு பார்ப்பதற்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு வருவார்கள் என்று அடியார்களால் கூறப்படுவதுடன் ஆறுகாலப் பூசைகளும் பூசைகளும் நடைபெற்ற ஆலயமாக இவ்வாயம் திகழ்ந்திருந்தது.

ஆனால் 1985ற்குப் பின்னர் இப்பிராந்திய மக்கள் கொள்ளை நோயினால் இடம்பெயர்ந்தார்கள் எனப்படுகின்றர். சிலர் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததால் இடம்பெயர்ந்தார்கள் என்ற கருத்து மக்களிடையே காணப்படுகின்றது. இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்தமையால் ஆலயத்தைக் காடு சூழ்ந்து கொண்டதுடன் ஆலயத்தின் பாகங்கள் கலையழிவுக் கொள்ளைக்காரர்களாலும் திருடர்களாலும் சூறையாடிப்பட்டு அழிவுகளைச் சந்தித்து வந்துள்ள போது கர்ப்பக்கிரகம் சிதைந்து விட்டது. அர்த்தமண்டபம்சிதைவுற்றநிலையில்பாதுகாக்கப்பட்டதுடன் மகாமண்டபமும் ஆலயக்கட்டங்களும் ஆலய அத்திவார மண்டபத்தில் புதையுண்டு காணப்படுகின்றது. இவற்றை நோக்கும் போது இங்கு ஒர் பெருங்கோயிலாக திருமங்கலாய் சிவன் அமையப்பெற்றிருந்தது என அறியமுடிகின்றது .இவ்ஆலயம் அழிவடைந்த போது இங்கிருந்த இலிங்கத்தையும் அம்பாளையும் திருவாளர் ஸ்ரீ தியாகராசா குருக்கள் என்பவர் இங்கிருந்த சைவ மக்களின் துணையுடன் எடுத்துக்கொண்டு வெருகலம் பகுதியில் சிறு கோயில் வைத்திருந்தார். பின்னர் இக் கோயில் பராமரிப்பற்றுப் போனதால் இத்திருவுருவங்கள் மூதூர் பிள்ளையார் கோயிலில் சில காலம் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அடியவர் ஒருவரால் மட்டக்களப்பிற்கு வழிபட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறுகின்றனர்.


இவ்வாறு பிரமாண்டமாக அமையப்பெற்ற திருமங்கலாய் சிவன் பல்வேறு காரணங்களால் அதன் கட்டுமானம் திருவுருவங்கள் அழிவடைந்தாலும் அவற்றினை ஆ
தியம்மன் கேணி 217/T என்ற கிராமசேவகர் பிரிநிலைக்கு உட்படுத்தி மீளவும் காடுவெட்டி அழிந்த கற்களை சரிசெய்து வழிபாடுகள் இயற்றப்பட்டு வருகின்றது.

பூசை வழிபாட்டிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருமங்கலாயில் இன்றளவும் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தில் பத்தினியம்மன் மடையும் அது தவிர வைரவர் மடையும் மக்களால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இறைவழிபாடுகளில் ஈடுபட்டு சென்ற நூற்றாண்டுக் காலத்திலும் பல துறவிகள் இச்சிவன் கோயிலில் வந்துள்ளதாகவும் தங்கியிருந்ததாகவும்;; அறியக்கூடியதாகவுள்ளதுடன் இவர்களில் கிளிவெட்டியைச்சேர்ந்தபசுபதிச்செட்டியார்சாமியார்ஆகியோரைகுறிப்பிட்டுக்கூறலாம்.அத்துடன;;; செல்லத்துரை இந்தியாவைச் சேர்ந்த தவத்திரு குன்றங்குடி அடிகளாரும் திருமங்கலாய் வந்துவழிபாடியற்றியதாக இப்பிராந்திய மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியான வழிபாட்டிற்குரிய இடமாகமீண்டும் இவ்வாலயத்தை ஒரு மாற்றியமைப்பதற்கு முதற்கட்டமாக இவ்வாலய சூழல் சுத்தமாக்கப்பட்டு பின்னர் அங்கு சேதம் உற்றிருந்த பழைய ஆலயக்கட்டடத்தை செம்மைப்படுத்தி புதியதொரு சிவலிங்கம் ஒன்று நந்தியெம்பெருமானுடன் 2016.11.30ம் திகதி சமய முறைப்படி பிரதிட்டை செய்யப்பட்டதுடன் 2017.02.24 அன்று மகாசிவராத்திரி பூசைகளும் சிறப்பாக நடைபெற்றதுடன் இன்றைய சூழலில் பழமைப் போன்று ஒரு புதுப்பொலிவினைப் மக்கள்ஏற்படுத்தி இப்பிரந்தியம் முழுவதும் திருமங்கலாய் சிவனாலயத்தின் பழமையான இந்துபபண்பாட்டை பேணிவருகின்றார்கள்.

Tuesday, March 14, 2023

கிராமங்களின் வளர்ச்சிப்போக்கில் 

சனசமூகநிலையங்களின் வகிபாகம்


   

 சனசமூகநிலையம் என்பது மக்களது வாழ்வியலில்  பின்னிப்பிணைந்த ஓர் அமைப்பாக இருந்து வருகின்றது. அவ்வவிதம் பண்டைய மக்களது பண்பாடுகள் யாவும் தொன்று தொட்டு பேணப்பட்டு வருகின்றமைக்கு ஒரு உதாரணமாக இவை விளங்ககின்றன. மனிதன் வாழ்வியல் போராட்டத்தில் பல சவால்களுககு முகம் கொடுத்து கிராமம் என்ற சிறிய அலகில் இருந்து சமூகக் கட்டமைப்புகளை வளம்படுத்தி நகரமட்டத்தில் வாழும்மக்களது வாழ்வியலைக் காட்டிலும் ஒரு சுதந்திரமான இயற்கை வாழ்வு முறைகளைப்பின்பற்ற இந்த சனசமூகநிலைகள் வழிவகை செய்கின்றன.

       அந்தவகையில் 'ஊருணி நீர்நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு' என்ற  வள்ளுவப்பெருந்தகையின் வாக்கின்பதம் ஊரிலே அனைவராலும் விரும்புமாறு மக்களிற்கு உதவி செய்பவனது செல்வம் நடு ஊரினுள் நல்ல நீர் ஊற்று       அமைந்தது போன்றது என்றதன் பிரகாரம் ஓர் கிராமத்தில் அமைக்கப்பெற்ற சனசமூகநிலையங்களும் இன , மத , மொழி , பால் பேதமின்றி அவ்வூரின் வளர்ச்சிக்கான அத்திவாரமாக விளங்குகின்றன.

      பண்டைய மக்களது வாழ்வியலில் 'ஆலயங்களே அவர்களது சேவை நிலையமாக காணப்பட்டது. அவ்விதம் கல்விக்கூடங்கள் , கலைக்கூடங்கள் , படிப்பகங்கள், பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றங்கள். ஆதுலர்சாலைகள் , என்றவாறு கிராமமட்டங்களில் ஆலயங்களோ பேசுபொருளாக காணப்பட்டது. காலப்போக்கில் இன்நிலமைமாறி  மக்களின் சேவை மையமாக சனசமூக நிலையங்கள்     முதன்மை பெறத்தொடங்கியது இவ்விதம் மரத்தடி நிழலில் ஒன்று கூடல்,பின்னர் மாலைப்பொழுதினை கழிப்பதற்காக ஒன்றுகூடும் போது  , அந்நேரத்தினைப் பயனுள்ளதாகப் பயன்படுத்த பத்திரிகைப்படிப்பகம் 


          என்றவாறு கொட்டகை அமைப்பு , கட்டிடஅமைப்பு என வளர்ச்சி பெற்று இன்று தன்னுள்ளே பல சேவை அமைப்புக்களை உள்ளடக்கி கிராமத்தின்    தாய்அமைப்பாக சனசமூகநிலையங்கள் உருப்பெற்றுள்ளது. அந்தவகையில் விளையாட்டுக்கழகம் , இளைஞர்கழகம் , மாதர்சங்கம் , முன்பள்ளி, சிவில்பாதுகாப்புக்குழு , சிறுவர் பாதுகாப்புக்குழு , டெங்கு கட்டுப்பாட்டுக்குழு , பொலீஸ்குழு ,கிராமமட்ட நல்லிணக்கக் குழு, சுகாதாரமேம்பாட்டுக்குழு என்ற அமைப்புக்கள் சனசமூகநிலையத்தினை மையமாகக்கொண்டு இன்று சேவை நல்கி வருகின்றமையைக் காணமுடியும். அந்த வகையில் தன்னுள்ளே தலைவர், செயலாளர் , பொருளாளர் என்ற பிரதான நிர்வாகக்கட்டமைப்பினையும் அதனைத்தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் புடைசூழ ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக கிராமத்தில் அமையப்பெற்று இருப்பதுடன் பத்திரிகைப்படிப்பகம் , என்ற பகுதிகள் ஒதுக்கப்பட்டு கிராமத்தின் இளையோர் தொட்டு முதியோர் வரை இலகுவாக வருகை தந்து இயற்கையுடன் ஒட்டியவாறு இதமான அறிவினைத்தேடுவதற்கு ஏற்ற சாளரங்கள் கொண்ட ஓர் பகுதியில் அமையப்பெற்று இருக்கும் அதேபோன்று மழலைகளைக் கவர்ந்து  அவர்கட்கு கல்வியினை ஊட்டும் ஓர் அகமகிழ் கழகமான முன்பள்ளி அமைப்புக்களையும் அதனோடு சேர்ந்த விளையாட்டுப்பகுதிகளையும் கொண்டுள்ளதுடன் மாலை நேரக்கல்வி நிலையங்களாகவும் ஊரிலுள்ள இழைஞர் யுவதிகளால் மாணவர்கட்கு கல்வி புகட்ட ஏதுவாக அமைந்துள்ளது. மட்டுமல்லாது நூல்நிலையங்கள் , கணணிப்பிரிவுகள் , கற்கைகள் போன்ற கட்டமைப்புக்களும்; இந்த சனசமூகநிலையங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

         மேலும் கிராமத்தில் படித்து வேலை அற்று இருக்கும் இளைஞர், யுவதிகட்கு கைத்தொழிற்பயிற்சிகளாக, பன்னைவேலைகள் , தையல் மற்றும் அழகுப்பயிர்ச்சி நெறிகள் என்பனவும் கற்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் சிறந்த கைவினைஞர்களாக வலம்வர இந்த சனசமூகநிலையங்கள் செல்வாக்குச் செலுத்துவதோடு இல்லாது கிராமத்தில் ஒருபுறம் அபிவிருத்தியையும் மறுபுறம் அதற்கு தடையான பிணக்குகள் , முறண்பாடுகள் என்பதனையும் கிராமமட்டத்தில் விசாரித்து அவர்களுக்கு சாதகமான முறையில் சில தீர்ப்புக்களை வழங்குவதுடனும் தன்னைப்பார்த்துக்கொள்ள கிராமமட்டத்தில் சில யாப்புக்களையும் உருவாக்கி சேவைவழங்கும் ஓர் நிலைமையாக விழங்குகின்றதுடன்  மருத்துவமுகாம்கள், இரத்ததானங்கள் , கல்விக்கௌரவிப்புகள் போன்ற சேவையும் ஆற்றுp வருகின்றது.

       இத்தகைய கிராமங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிழங்கும் அமைப்புக்கள் பெரும்பான்மையானவைகள் வலுப்பெற்றுக்காணப்படுகின்ற போதிலும் ஒருசில சனசமூகநிலையங்கள் கிராமமட்டங்களில் வலு இழந்து காணப்படுகின்றது. இருப்பினும் சில புத்திஜீவிகளால் ஓரளவு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலமையானது சில இளைஞர்ககளது சமூக அக்கறையற்ற போக்குகளும் , நிர்வாகக் கட்டமைப்புக்களை தொடர்ச்சியாக ஒரு குழு ஆக்கிரமிப்புத்தன்மை , உரியகாலத்தில் மாற்றம் செய்யப்படாத நிர்வாக முறைமைகள் , ஜனநாயகம் அற்ற நிர்வாகத்தெரிவுகள் ,  உள்ளிட்ட சில செயற்பாடுகளில் நாம் மாற்றங்களை மேலும் கொண்டுவரும்போது இத்தகைய நிலையங்களில்களில் இளைஞர் யுவதிகளின் பங்களிப்புக்கள் பெருகும் என்பது காலத்தின் திர்க்கதரிசனம்.

                                             



                                            
                                             
திரு.மன்மதராசா தசிதரன்

                                              (அபிவிருத்தி உத்தியோகத்தர்

                                                            கட்டுவன் மேற்கு)


அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு





உள்ளங்கையளவு சுருங்கி வரும் உலகத்தில் எந்திரமாய் இயங்கி வரும் மனிதனது வாழ்வியலோட்டத்தில் 'வாசிப்பு' என்பது வாயடைத்துப் போன ஓர் நிலையினை காணமுடிகின்றது. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆறு அறிவுடன் இயங்குவது தான். இதில் ஆறாம் அறிவான பகுத்தறிவிற்கே மிகவும் முக்கியத்துவம் உண்டு. காரணம் அதுவே மனிதனை இவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. நல்லது கெட்டது என்பதனை கேட்டல், பார்த்தல், வாசித்தல் போன்றவற்றின் அறிவு முதிர்ச்சியே மனிதப்பரிணாம வளர்ச்சியாகும்.

பண்டைய காலம் தொட்டு தற்காலம் வரை மனித சமூகத்தின் உயிர் நாடியாக 'வாசிப்பு' என்பது திகழ்ந்துள்ளது என்பதனை மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாத ஒன்றாகும். இதனால் தான் 'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.' எனக் கூறப்படுகின்றது. இவ்விதம்


வாசிப்பானது புராதன காலத்தில் மொழி என்ற கட்டமைப்பு தோன்ற முன்பே குறியீடுகளை வாசித்து பொருள் புலர்ந்து நம் புத்திக் கூர்மையை வளம்படுத்தியமையை இன்றைய ஆய்வுகளில் கிடைக்கும் மட்பாண்டங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றில் உள்ள குறியீடுகளைக் கொண்டு காட்ட முடிகின்றது. இத்தகைய தொடர்ச்சியான வாசிப்பானது மரத்தடி நிழல்களிலும் சனசமூக நிலையங்களிலும், பள்ளிகளிலும், பிரிவேனாக்களிலும், அறநெறிகளிலும், பிரயாணங்களிலும், சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாசிப்புப் பழக்கத்தின் விளைவே இவ் உலகம் பல அறிவியல் மேதைகளை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

     இவ்வாசிப்பானது மேல் எழுந்தவாரியாக வாசித்தல் 'நுனிப்புல் மேய்தல் போல்...' எனவும் ஆழமாக வாசித்தல் என இரண்டுவகைக்குள் அடக்குவர் கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், பத்திரிகை, நகைச்சுவை, பொழுதுபோக்கு, அறிவியல், வானிடம், சோதிடம், கணிதவியல், போன்ற பல அறிவுப் பொக்கிஷங்களை வாசிப்பது தேடல், கிரகித்தல், ஆராய்தல், கற்பனை வளம் மற்றும் எழுத்துப்பிழை இன்றி எழுதும் ஆற்றல் சரியான முறையில் சொற்களின் பிரயோகம் போன்ற அறிவாற்றலை வளர்க்கும் சாதனம் ஆகும். இத்தகைய அறிவு மிக்க புத்தகங்களின் வாசிப்பானது ஆளுமை மிக்க சமுதாயத்தை கட்டியமைக்க உதவ முடியும்.

'வாளினுடைய கூர்மையும் நூலினுடைய கூர்மையும் ஓர் நாட்டை ஆளும்...' என்று கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் நூலினுடைய கூர்மைதான் உலகத்தையே ஆள்கின்றது என்றால் மிகையாகாது. இதனாலேயே மார்ட்டின் லூதர் 'துப்பாக்கியை விடவும் பயங்கரமான ஆயுதம் புத்தகங்கள்..' எனக் கூறியுள்ளார்.

இத்தகைய வாசிப்புப் பழக்கமானது ஆன்மாவைக் கூர்தீட்டும்அறிவை மெருகேற்றும் அனுபவங்களை அடுக்கடுக்காய் அணிதிரட்டி அறிவுரைகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்குகின்றது. புத்தகம் ஒரு சிறந்த நண்பன், அற்புதமான வழிகாட்டி. வெறும் எழுத்துக்களால் மட்டுமான காகிதங்களின் கூட்டு அல்ல. அது ஒரு ஆன்மாவின் அசரீரி, அது அமைதியாய் உறங்கும் அந்தராத்மாவை, வாசிப்பு தட்டியெழுப்பும் அறிவுரையும் அனுபவமும் அள்ளித்தரும். பொது அறிவுகளும் பொன்னான கருத்துக்களையும் பொழிந்து தள்ளும் கார்மேகமாக விளங்குகின்றது.

மனிதனை மனிதனாக வையத்தில் வாழ வைப்பதற்கு கல்வியும் அதனோடு இணைந்த வாசிப்புப் பழக்கமுமே உன்னதமாக திகழ்கின்றது இதனையே 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூ

லளவே ஆகுமாம் நுண்ணறிவு' என ஒளவையார் நாலடியாரில் நயந்து கூறியுள்ளமை வாசிப்பின் மகத்துவத்தினையும் கல்வியின் சிறப்பினையும் காட்டுகின்றது. மேலும்'தொட்டனைத்

தூறும் மணற்கேணி மாந்தற்கு

கற்றனைத்தூறும் அறிவு..' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை அதாவது மண்ணை எவ்வளவு ஆழமாக தோண்டினாலும் நீரானது சுரப்பதைப் போல் நல்ல நூ

ல்களை வாசிப்பதால் மனிதர்க்கு நல்லறிவு தோன்றும் என்பது புலப்படுகின்றது. நல்ல நூ

ல்களைப் படிக்கப் படிக்க அறிவானது வளர்கின்றது. இதனை நான் சொல்லக் காரணம் நஞ்சு கொடுக்கப்படும் வரை கிரேக்க நாட்டு நூ

ல்களைப் படித்துக் கொண்டு இருந்தவர் சாக்ரட்டீஸ். இறக்கும் தருவாயிலும் கூட வாசிப்பின் மீது கொண்ட அவரது ஆழமான அன்பு இன்னும் நிலைத்து நிற்கின்றது.

இவ்விதம் வாசிப்பின் சுவையறிந்து, நூ

ல்களின் திறன் அறிந்து, வாசித்தால் வாழ்வியலின் வெற்றியம்சங்களை உணர்ந்து மனம் திறந்து அதன் பெருமையுரைத்துக் கொள்ளலாம். பிரபஞ்ச முடிவுவரை நிலைத்து நிற்கும் பிரபலங்கள் சிலரின் அனுபவத் தொகுப்புக்கள் வாசிப்புப் பழக்கத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன.

'நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பனாவான்..' ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார். மேலும் 'வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் எனக்கு அனுமதியுங்கள்' என நெல்சன்மண்டேலாவும், 'ஒரு நூ

லகம் திறக்கப்படும் போது ஊரிலுள்ள பல சிறைச்சாலைகள் மூடப்படும்..' என சுவாமி விவேகானந்தரும், 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக்காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி..' என ஜூலியர்சீசரும், தான் படித்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடச் சொன்னவர் அறிஞர் அண்ணா, படிப்பகங்களிற்கு அருகில் உறங்கும் இடத்தைக் கேட்டார் அம்பேத்கர். 33 ஆண்டுகள் நூ

லகத்தில் மூழ்கி 'மூலதனம்' எனும் கம்னீனச சித்தாந்தத்தை கண்டுபிடித்தார் கார்ல்மார்க்ஸ். இத்தகைய அறிஞர்கள் வாசிப்பதற்கு முதன்மை  கொடுத்துள்ளார்கள் என்றால் வாசிப்பு அந்தளவிற்கு அவர்களது வாழ்க்கைக்கு நிறைய பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. கம்பனுடைய ஒரு செய்யுள், பாரதியினுடைய ஒரு பாட்டு ஏன் கண்ணதாசனுடைய ஒரு வரி நம்முடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். இதுவே வாசிப்பினுடைய மகத்துவமும். ஒருவரி பல அர்த்தங்களையும் அனுபவங்களையும் பெற்றுத்தருகின்றது.


இத்தகைய மகத்தான வாசிப்புப் பழக்கமானது இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனை வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்ற போதிலும் சாணேற முழம் சறுக்கிய கதையாய் அதில் உள்ள ஏனைய பல அம்சங்கள், இலத்திரனியல் விளையாட்டுக்கள், நண்பர்கள் மற்றும் புதியவர்களுடனான அரட்டைகள், முகநூ

ல் பாவனை, கட்டணமின்றிய தொலைபேசி வசதிகள் போன்றன பொன்னான நேரத்தை விரயமாக்கி வாசிக்கும் பழக்கத்தை கணிசமான அளவிற்கு குறைத்துவிட்டன என்பதும் கசப்பான உண்மையே!

இத்தகைய நிலைமை மாறவேண்டும். மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டியும் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பெற்றோர்களது தலையாய கடமையாகும் அதாவது 

'வா வாசிக்கலாம் என்கிறது புத்தகம்.. 

வா சிக்கலாம் என்கிறது சமூகவலைத்தளம்..' இதனைத்தாண்டியும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உலக நியதியாகும். இதனால் தான் குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் வாசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

எனவே நாட்டில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கும் நோக்கத்திற்காக 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதன் முதலாக இலங்கை கலாசார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்த் தேசிய நூ

லகம் மற்றும் ஆவணவாக்கல் தேசிய சபையினால்

National Library and Documentation Service Board) ;   தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப் படுத்தப்பட்டு நலிவடைந்த வாசிப்பை மீள புத்துயிர் ஊட்டும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பிரிவேனாக்கள், கிறிஸ்தவ மிஷநெறிகள், ஆலய அறநெறிகளில் வாசிப்புத் தொடர்பாக பல ஆக்க
பூர்வமான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக அண்மைக் காலங்களில் வட பகுதியில் அமைந்துள்ள நூலகங்கள் தனக்கென ஓர் தனித்துவமான சிறப்பியல்புகளைக் கொண்டு

விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தில் சரிந்து கிடக்கும் வாசிப்பானது நிமிர்ந்து நின்று மேன்மையடைய வாசிப்புப் பழக்கம் நிலைபெற வேண்டும். இல்லையேல் காலம் முழுவதும் உடல் உழைப்பை நம்பி, மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, போவதனைத் தவிர வேறு வழியில்லை. அதற்காகவாவது படிக்க வேண்டும். மாணவ சமூகங்களே ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள்! பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கும் குழந்தைகளின் கால்களைத் தாங்குவதற்கு பல தோள்கள் உள்ளன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கும் குழந்தைகளின் தோள்களிற்கு சுமைகள் மட்டுமே காத்திருக்கின்றன. பணக்கார வீட்டில் பிள்ளைகள் வளர்ந்து பிறக்கின்றார்கள்É ஏழைவீட்டில் பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து பிறப்பது வாரிசு உரிமை, பிறந்து வளர்வது பிறப்பின் உரிமை. அதற்காகவாவது படிக்க வேண்டும். அதற்கு வாசிப்பு வேண்டும். வாசிப்போம்É நல்ல நூல்களை நேசிப்போம்É வாழ்க்கையை யாசிப்போம்.


மன்மதராசா தசிதரன்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்,


 


Wednesday, July 5, 2017

பருத்தித்துறையிலுள்ள தெருமூடி மடமும் அதன் பிரதான இயல்புகளும்.


பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன் கோவிலுக்கு அணித்தாக அமைந்துள்ள இத்தெருமூடி மடமானது பல்வேறு காலகட்டங்களில் திருத்தப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வந்துள்ளமையைக் காண்கின்றோம். அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டு கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியானது 150 வருகாலப் பழமை மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.


 திராவிடக்கலைப் பணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள் மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்கதாகும். வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம். 'பொழிந்த வெண்வைரக் கற்சதுரங்கள்' பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பாவப்பட்டு அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட முறையைப்பார்க்கும் போது அவற்றின் சிறப்புக் கூறுகள் அதன் நீணட காலப்பாவனை ஆகியன வெளிப்படுகின்றன.
இருபக்க திண்ணைகளிலும் கல் பாவப்பட்ட தளத்திலிருந்து நான்கு பக்கச்சதுரப்பட்டை அமைப்புடன் ஆரம்பிக்கும் கற்றூண்கள் அவற்றின் கூரையைத் தாங்கும் பகுதியில் தூண்கபோதத்துடன் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இருபக்கங்களிலும் எல்லாமாக 16 தூண்கள் காணப்படுகின்றன. அற்றுள் 6 தூண்களில் தமிழ் வடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவ வளர்ச்சியை அச்சாசனங்களில் காணமுடிகின்றது. இச்சாசனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை அவற்றைப்படியெடுத்ததன் (நுளவயஅpயபந) பின்னரே வெளிப்படுத்த முடியும்.

therumudi madam

தூண்களின் அமைப்பு தனித்துவமானது. ஒற்றைக் கற்றூண்களாக காணப்படும் இவை நடுவில் எண்பக்கப்பட்டையுடனான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணின் கபோதம் உட்பட முழுத் தோற்றமுமே பல்லவர் கலை மரபினைத்தழுவி உருவாக்கப்பட்டுள்ள முறையைக் காண்கின்றோம். இத்தெரு மூடி மடத்தினது இரு புறங்களிலும் உயர்ந்த மேடைபோல் காணப்படும் இருபக்கத்  திண்ணைகளினதும் வெளிப்புறச்சுவர்கள் சுண்ணச் சாந்தினால் கட்டப்பட்டவையாக உள்ளன. இவ்விரு திண்ணைபோன்ற தளத்தின் அகல நீளமானவை தூரப்பார்வைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் நடுமண்டபத்திற்கு இருமருங்கிலும் காணப்படும் நடைமண்டபமாக (ஐளடநள) தோற்றமளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்திரமாக மேலெழுப்பப்பட்டுள்ள ஓர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய  ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினால் இத்தெரு மூடி மடத்தூடான வாகனப் போக்குவரத்து நடைமுறைகளுக்கு அந்த உயர்ந்த கூரை எவ்விதத்திலேனும் தடையாகவோ, இடைஞ்சலாகவோ அமையாது   ஒரு பொலிவான தோற்றத்தினை தூரப்பார்வைக்கு வழங்குவதனை காண்கின்றோம்.
இத் தெருமூடிமடத்தின் இருபக்க மண்டபகங்களினதும் மேற்கூரை தட்டையானதாக (குடயவந) அமைக்கப்பட்டுள்ளது. நீள்சதுர கூரையமைப்பின் தட்டையான பரப்பினை உருவாக்குவதற்கு நீளமான வெண்வைரக் கற்பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கற்பலகைகளுக்கு மேல் சுண்ணச்சாந்து இடப்பட்டு நீர் கசியாதவாறு வெகுகச்சிதமாக அக்கூரையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.உயர்ந்துள்ள பிரதான நடுக்கூரையின் இருபக்கங்களிலும் காணப்படும் இத்தட்டையான இரு கூரைத்தட்டுக்களின் கூரை முகப்புக்கள் இரு முனைகளிலும் வெளியே தெரியாதவாறு பக்கவாட்டாக அவ்வற்றின் முகப்பில் எழுப்பப்பட்ட கபோதத்தின் மீதான குறுக்கு அரைச் சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடக்கலை ரீதியாக நோக்கும் போது யாழ்ப்பாணத்திற்கேயுரிய திருப்பணிக்கல் - கட்டிடக்கலை மரபும் கிறிஸ்தவ கட்டிடக்கலை மரபும் ஒன்றிணைந்த கையில் மீளுருவாக்கம் பெற்றதாகவே இத் தெருமூடி மடத்தினைக் கொள்ள வைக்கின்றது.
இன்றைய நிலையில் இத்தெரு மூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைதாங்கிக்கல், ஆவுரஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர்த்தொட்டி (கற்தொட்டி) ஆகியன முற்றாகச் செயல் இழந்த நிலையிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக்குடா hரவலாகக் காணப்படும்  சுமைதாங்கிக்கற்களும், ஆவுரஞ்சிக்கற்களும் 'றோட்டுக்கரைப்பிள்ளையாரை' போன்று 'சும்மா' வீற்றிருக்கின்ற வகையைக் காண்கின்றோம்.

ரயர் - ரியூப் ஒட்டுகின்ற புத்திசாலிகளான சில கடைக்காரர்கள் இவ்வாறு சும்மா கிடக்கும் கற்தொட்டிகளை நகர்த்திச்சென்று தமது தொழிலகங்களில் நீர்த்தாங்கியாக உபயோகிப்பதனையும் காண்கின்றோம். பித்தளைக்குத்து விளக்குகள் வெளிநாடுகளிலுள்ள எம்மவர் மத்தியில் யுளுர் வுசுயுலு ஆகப்பயன்படுத்தப்படுவது போன்று யாழ்ப்பாணத்திலும் கலாச்சாரப் பிறழ்வுகள் மேலோங்கி வருகின்றன.

therumudi madam data

இன்றைய நிலையில் இத்தெருமூடி மடத்தினை இணைத்துள்ள ஒரேயொரு பயன்பாட்டு வெளிப்பாடு ஆடு – மாடுகளின் மற்றும் கட்டாக்காலி நாய்களின் இராத்தங்கும் ஓர் ஆரோக்கியமான மையமாக மட்டுமே காணப்படுவதாகும். தமிழரது பண்பாட்டின் கால ஓட்டத்துடனான பண்பாட்டு விரிசல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத்தில் இச்சின்னங்களை பராமரித்து கட்டிக்காத்து வைத்திருக்க வேண்டிய அடுத்த தேவை என்ன என்பது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு எம்மால் விடையளிக்க முடியாதுள்ளது. இந்துப்பண்பாட்டு மரபில் குறிப்பாக யாழ்ப்பாணத்து சுதேசிய கிராமிய வழமைகளிலும் மனித உறவுகளிலும் ஏற்பட்ட மிகப்பாரிய விரிசல்களாலும் மற்றும் அன்னியப் பண்பாட்டுத் தாக்கங்களினாலும் பொருளாதாரத்தில் யாழ்ப்பாணத்து உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்களினாலும் எம்மவர் மத்தியில் ஏற்பட்ட வாழ்க்கை நிலையாமை போன்ற உளவியற் தாக்கங்கள் ஊடே உருவான மாற்றங்களினாலும் எமது பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்கள் உடையணியும் மரபுகள் மற்றும் இறப்பு பிறப்புத் தொடர்பான வழமைகள் சடங்குகள் மரபுகள் யாவும் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்தை கைவிட்டு மறைந்து சென்றமையின் பின்னணியில் தெருமூடி மடங்கள் ஆற்றிய சேவை இன்று எமக்கு தேவையற்றனவாக இன்றைய யாழ்ப்பாணத்து பண்பாட்டிற்கு அன்னியமானவையாக அமைந்து விட்டதைக் காண்கின்றோம்.





உசாத்துணை நூல்கள்

  1. நகுலன்.க. 2013 வடமராட்சியின் மரபுரிமைச்சின்னங்கள் கமலம் பதிப்பகம் பக்.34-36.
  2. கிருஸ்ணராசா.செ. 2015 தொல்லியிலும் வடமராட்சியின் தொன்மையும் பிறை நிலா வெளியீடு பக்.114-117.











குப்தப் பேரரசர்களின் நாணயங்கள்


வட இந்திய வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு ஆட்சிக் காலமானது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். வடக்கே இமயம் முதல் தெற்கே குமரிவரையுள்ள ஷத்திரிய ஷேத்திரத்தனை கொண்ட பேரரசுக் கட்டுமானத்தை ஏற்படுத்திக் கொடுத்த காலம் இதுவாகும். மிகப் பலமான இராணுவக் கட்டமைப்பின் பின்னணியில் நிலமானிய சமூக அடிப்படையில் உருவான ஒருவகையான நிர்வாக முறையே பேரரசின் எழுச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.

இந்தியக் கலை மரபின் நோக்கங்களும் இயல்புகளும்


இந்தியக் கலை மரபானது தென்னாசியாவில் தனித்துவம் மிக்கதாகவும் பொதுமையான இயல்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதாகவும் காணப்படுகின்றது. அங்கு அது மக்கள் வாழ்வினையும், மத அனுட்டான முறைகளையும் ஒருங்கே இணைக்கின்ற வகையில் வளர்ச்சி பெற்றுச் சென்றதன் அடிப்படையில் கலையுலகில் தனக்கெனத் தனித்துவமான ஓர் இடத்தினைத் தென்னாசியக் கலை மரபுகள் பெற்றுவிட்ட தெனலாம்.

எனவே இவ்வாறான தனித்துவம் வாய்ந்த கலையின் இயல்புகளையும் அவற்றின் நோக்கங்னளையும் ஆராய்வதற்கு முன்னர் 'கலை' என்றால் என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
கலை எனப்படுவது செயல் என்ற வினையின் (யுசவ யனெ யுஉவழைn)அடியாகத் தோற்றம் பெற்றுது எனக் கலை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இக் கலை நிபுணர்கள் 'கலை' என்றால் என்ன என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள் காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டதாக அமைந்து விடுகின்றது. எது எவ்வாறு அமையினும் 'கலை' என்பது ஒரு வெளிப்பாடே என்பது தான் பொதுமையான கோட்பாடாகும்.
கலை என்பது ஜீவனோபாயத்தின் வெளிப்பாடு என வானமாமலை என்ற அறிஞர் எடுத்துக் காட்டுகின்றார். இவர் கலைகளின் தோற்றம் தொடர்பாக விளக்குகையில், மனிதன் கற் காலத்தில் இருந்தே கலைகளில் ஈடுபட்டு வந்தான் எனக் குறிப்பிடுகின்றார். மனிதன் நாள் முழுவதுமே தனது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக சில யுக்திகளைக் கையாளவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டான். அதனால் அவன் கருவிகளைப் பயன்னடுத்தத் தொடங்கிய காலம் முதல் அக் கருவிகளானது நிறைவான உபயோகத்தின் பயன்பாட்டிற்காக அவற்றைச் செப்பனிட ஆரம்பித்தான். பின்னர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக தனது வதிவிடத்தில் பரீட்சித்துப் பார்த்ததின் பின்னணியிலேயே கலைகள் தோற்றம் பெற்றிருக்கலாம் என ஊகிக்னப்படுகிறது. வட ஸ்பெனியில் உள்ள அல்மிரா குகை ஓவியங்களும் இவ் வழியே உருவானவையாகும் என்பது அறிஞர்களது கருத்தாகும். வானமாமலை என்பவர் கலைகளின் தோற்றத்திற்கும் ஜீவனோபாயத்திற்கும் இடையே இருந்திருக்கக்கூடிய நெருங்கிய தொடர்பு முறைக்கு உதாரணமாக இதனை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றார்.

Indian-sculpture



ஆனால் கலை என்பது அழகியல் உணர்வின் அடிப்படையில் தோற்றம் பெற்றது என அழகியல் கலை பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றர். அழகியல் உணர்வின் வயப்பட்ட நிலையில் கலைகள் தோற்றம் பெறுவதற்கு ஓய்வு நேரம் அவசியமானதென்பது குறிப்பிடக்கூடிய ஒரு விடயமல்ல. உற்பத்தி ஒழுங்குகள் நெறிப்படுத்தப்பட்ட காலத்திலே மனிதன் ஓய்வு நேரத்தை அனுபவிக்கத் தொடங்கினான். மிகை உற்பத்தியானது கலை வெளிப்பாட்டினை ஒரு சிறப்புத்தேர்ச்சிக்குரிய அங்கமாக மாற்றியமைத்தது. புராதன நதிக்கரையோர நாகரிகங்களில் கணிதம், விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம் என்பன எவ்வாறு சிறப்புத் தேர்சிசியாளர்களின் பங்களிபடபாக அமைந்ததோ அவ்வாறே கலைகளின் வெளிப்பாடும் சிறப்புத் தேர்ச்சியாளர்களின் கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டதாக அமைந்தது எனலாம். இது அழகியல் என்ற அடிப்படையில் ஓய்வு நேர கால சிறப்புத் தேர்ச்சியாக தோற்றம் பெற்றது என்றால் அதிலும் தவறு இருக்க முடியாது.
எது எவ்வாறு இருந்த போதிலும் அழகியல் அடிப்படையிலான கலை உணர்வு ஐரோப்பாவில் 15ம், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பெருவளர்ச்சியடைந்தது என்பதனை மறுக்க முடியாது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில் அழகியல் உணர்வினால் உந்தப்பட்ட நிலையில் பிரபுக்களும், செல்வந்தர்களும் பாரம்பரியக் கலை அம்சங்களை உருவாக்கியளித்த உரோமானியக் கலைப் படைப்புக்களில் நாட்டம் கொண்டு அவற்றை வெறும் அழகியல் உணர்வின் அடிப்படையில் சேகரித்து வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டடிருந்தனர். விருந்தினர் தங்குகின்ற விடுதிகளிலும், வரவேற்பறைகளிலும் இத்தகைய கலைக் கரூவூலங்கள் அழகியல் நோக்கத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Ajanta_Caves
 எனவே அழகியல் அடிப்படையூடான கலைப் படைப்புக்கள் பற்றிய சிந்தனைகளின் வெளிப்பாடாக ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் அமைந்தது என்றால் மிகையில்லை.
கலை, வருவாயை ஈட்டித் தருவதாக இப்போது கருதப்படுகிறது. இதனையே ஐவெநச யுசவ என்ற பதம் குறித்து நிற்கின்றது. ஒரே மாதிரியான கலைப் படைப்புக்கள் தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் (ஐனெரளவசயைட யுச) உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதனை இப்போது காணலாம். இத்தைகைய கலைப் படைப்புக்கள் எந்தளவிற்கு அந்நாட்டினுடைய பண்பாட்டினை பிரதிபலித்து நிற்கின்றது என்பது கேள்விக்குரியதே. இருந்தாலும் கலை வெளிப்பாட்டினைப் பொறுத்தவரை அவை மனித சிந்தனையை வெளிப்படுத்தி நிற்பதன் அடிப்படையில் முதன்மை பெநுகின்றதெனலாம். எனவே சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது கலை என்பது விஷேடமாக இந்தியக் கலை வரலாற்றுக்கு முற்றிலும் பொருந்துவதாகின்றது.


இந்தியக் கலைகள்  மேல்நாட்டுக் கலைகளைப் போன்றதல்ல. பேரின்ப நெறிக்குச் சாதனமாகவே பெரும்பாலும் கலைகள் கையாளப்பட்டு வந்தன. கலையைக் கலைக்காக (யுசவகழச யுசவ ளுயமந) வளர்க்கும் நோக்கம் இருந்ததில்லை. சிற்பம், ஓவியம், இசை என்பன ஆத்மீக வாழ்வைப் பெறுவதற்காகவே உபயோகிக்கப்பட்டன. எனவே இந் நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் கலைகளுக்கும், உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பெறுவதற்குச் சாதனமாகப் பயன்படுத்தப்படும் கலைகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது இயல்பு ஆகும்.
இயற்கைப் பொருட்கள் கண்ணிற்கு எவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதம் தோன்றுகின்றனவோ அவ்விதமே அவற்றினைப் புனைவது தான் மேல் நாட்டுக் கலையின் நேக்கமாகும். இது ஆங்கித்தில் சுநயடளைஅ (பிரகிருதிவாதம்) எனக் கூறப்படும். ஆனால் இந்தியக் கலைகள் இதற்கு மாறுபட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளன. இயற்கைப் பொருட்களை பார்ப்பவர் மனத்தில் 'கலை இன்பத்தினை' எழுப்பக்கூடிய விதத்தில் திரிவு பண்ணி அமைத்தலே இந்தியக் கலையின் நோக்கமாகும். 'கலை இன்பமாவது' காவியம், சிற்பம், ஓவியம், இசை என்ற இக் கலைகளின் வாயிலாகத் தூய நிலையின் கண்ணே எழுகின்ற இன்பமாகும். இவ்விதம் பொருட்களை அமைத்தல் னைநயடளைஅ (குறிக்கோள்வாதம்) எனக் கூறப்படுகின்றது. இக்கருத்துக்களை டாக்டர் முல்க்ராஜ் அநந்தர் என்பவர் நயமாக விளக்குகையில், 'இந்தியக் கலைகளின் கண்ணே மாறுதலடையாத ஒரு சமய நோக்கம் உண்டு. மனித வாழ்க்கையின் எல்லாத் தன்மைகளுக்கும் தெய்வீகக் கருத்தே கொள்ளப்படுகின்றது. கலைப் பொருட்களுக்காக காட்டப்படும் உருவங்கள், மரங்கள், மலர்கள், பறவைகள் என்பன யாவும் இயற்கையில் இருந்தே எடுக்கப்பட்டனவாயினும் அவை விண்ணுலக வாழ்வின் இயல்பினைக் காட்டுந் தன்மையுள்ளனவாக அமைக்கப்படுகின்றன. ஓவியத்திலாயினும், சிலையுருவிலாயினும், மட்குடத்திலாயினும் பொறிக்கப்படும் சிறிய ஒரு சித்திரந்தானும் மனிதன் கடவுளை எப் பொருளினுங் காண்கினறான் என்னும் உண்மையை விறங்குவதுமின்றி, கடவுள் எல்லாப் பொருள்களுக்கும் ஒரு தெய்வீக இயல்பினை அளித்திருக்கின்றான் என்பதனையும் மனிதனுக்கு விளக்குவதாகின்றது. இந்தியக் கலையானது எல்லாப் பொருள்களையும் பேரின்ப உணர்ச்சியோடு நோக்குகின்றமையால் அதன் கண்ணே ஐரோப்பியராற் கொள்ளப்படும் பிரகிருதிவாதத்திற்கு இடமேயில்லை' எனக் குறிப்பிடுகின்றார்.
'ஐரோப்பியக் கலையானது இறகுகள் கத்தரிக்கப் பெற்ற பட்சியைப் போல் மேலெழாது நிலப்பரப்பிலுள்ள அழகினை மாத்திரமே அறிகின்றது. இந்த வகையில் ஐரோப்பிய சிற்பம், ஓவியம் முதலியன இயற்கையின் வெளிப்புறத் தோற்ற அமைப்பையும், அழகையும் உருவகப்படுத்திக் காட்டுவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியக் கலையோவெனில் பிரபஞ்சாதீவு உச்சியுட் புகுந்து, மனம் வாக்கிற்கு எட்டாத உண்மைப் பொருளின் அழகை நிலவுலகிற்கு இழுக்கப் பிரயத்தனப்படுத்துகின்றது' எனக் 'ஹவல்' எனும் கலைப் புலவர் குறிப்பிடுகின்றார்.
இவ் வகையில் ஐரோப்பியக் கலையில் நோக்கத்தினின்றும் முற்றிலும் மாறுபாடு கொண்டமைந்த இந்தியக் கலைகள் தமக்கெனத் தனித்துவமான குண இயல்புகளையும் கொண்டுள்ளன. இந்த வகையில் இந்தியக் கலை மரபைப் பொறுத்த வரை கலைஞனானவன் சாதாரணமான ஒரு புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளான் எனக் கூற முடியாது. ஆனால் புகைப்படக் கலைஞனைப் போன்று இயற்கையிலுள்ள பொருட்களை அவ்வாறே சித்தரிப்பது ஒரு கலைப்படைப்பும் ஆகிவிட முடியாது. எனவே தான் இந்தியக் கலைஞனானவன் இயற்கையைத் தனது கலைப்படைப்புக்குத் துணை மூலங்களாகப் பயன்படுத்தியிருந்தமையினைக் காண முடிகின்றது.
இந்தியக் கலைஞன் தனது கலைப்படைப்பின் பிரதான பொருளாக இயற்கையை என்றுமே கொண்டதில்லை. பெருமளவிற்கு குறியீடுகளையே அவன் தனது கலைப் படைப்பில் கொண்டிருந்தான். இதனால் புராதன இந்தியக் கலைப் படைப்புக்களில் குறியீடுகள் இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றன. இக்குறியீடுகளானவை கலைஞன் தான் உணர்ந்த வந்த பொருளை நேரடியாக உணர்த்தாமல் மறைமுகமாக உணர்த்துவதற்கு வகை செய்ததன் அடிப்படையில் ஒரு வகையான கற்பித நோக்கிலமைந்த கலை வெளிப்பாடுகளை கலைஞன் வெளிப்படுத்தி நின்றமையைக் காணலாம். இவ்வாறு கற்பித்த நோக்கில் அமைந்த கலை முழுவதும் விரவி வருகின்ற ஒரு பொதுமையான அம்சம் ஆன்மீக விடுதலை என்பதாகும். இத் தன்மையானது பௌத்த, சமண, அஜீவக மதப் பிரிவுகளுக்கெல்லாம் பொதுமையாக அமைந்து விடுகின்றது.
இந்திய மரபில் வாழ்க்கைத் தத்துவம், கலை, சமயம் ஆகியவற்றை தனித்துவப்படுத்தி உணர முடியாத இணைவுத் தன்மைதான் இந்தியக் கலைக்கோ, இந்திய வாழ்க்கைக்கோ, இந்திய தத்துவத்திற்கோ, இந்திய சமயத்திற்கோ உள்ள முழுமைத் தன்மையாகும். இதன் உள்ளார்ந்த சிறப்பைத் தான் பொதுவாக 'இந்தியம்' எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே இந்த வகையில் தான் இந்தியக் கலை என்பது வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத வாழ்க்கை நடைமுறையைக் கலையாக, ஓர் இனத்தின் வெளிப்பாடாக, தனித்துவமானதுமான பண்புகளைக் கொண்டவாறு பரிணமித்துள்ளது.
இந்தியாவில் ஓர் இனத்தின் அனுபவத்தை வெளிப்படுத்தும் பொருளாக கலை அமைகிறது. அந்த வகையில் நாம் நாள் தோறும் உண்ணும் உணவுப் பொருட்கள் வாழ்கடகையின் முக்கிய தேவையாக அமைகின்றது போன்று அத்தேவையின் பிரதிபலனாகக் கலை ஆக்கப்பட்டு விடுகின்றது. இந்த வகையில் ஐரோப்பியக் கலை மரபினின்றும் இந்தியக் கலையின் தோற்றம், சூழல் என்பன முற்று முழுவதுமாக மாற்றமுற்றிருந்ததனைக் காணலாம்.
தற்கால இந்தியாவில் கலை எனும் போது அது ஓர் இனத்தின் வெளிப்பாடாக அமைந்ததினால் எந்தக் கலை வெளிப்பாட்டினையும் விளங்கிக் கொள்வதற்கு தனித்தனி மனிதனது கலையறிவு அவசியமாகின்றது. இங்கு எந்த ஒரு கலை வெளிப்பாடும் போதனைத் தன்மையில் தங்கியிருப்பதுமில்லை. இந்த ரீதியில் தற்காலத்து கலை பற்றிய கலைப்படைப்பை பற்றி புரிந்து கொள்வதற்கு பொதுவாக அது ஆக்கப்பட்ட காலத்திலும், இடத்திலும் வாழ்ந்தோருடைய அனுபவங்களை விளங்கிக்கொள்ள வேண்டும். குரு சீட முறைப்படி தொழில் முறைகளைக் கற்றுக் கலைப்படைப்புக்களைச் செய்வதனைத் தம் வாழ்க்கைத் தொழிலாக கொண்ட கைவினைத்திறன் படைத்தோரால் தான் இந்தியக் கலை வேலைப்பாடுகளும், ஆக்கங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் இங்கு தனித்துவமும், புதுமையும் முன்னரே திட்டமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட பண்புகளாக அமையவில்லை. புராதன இந்தியாவில் ஒரு காலத்துக்கு கலை மரபில் இருந்து இன்னொரு காலத்துக்கு கலை மரபையும் வேறுபடுத்திக்காட்டும் வடிவ மாற்றங்கள் அவ்வக் கலையினுடைய சமய தத்துவக் கருத்துக்களையும், எழுச்சிகளையும், வளர்ச்சிகளையும் பிரதிபலிப்பனவே தவிர அவை கலைஞருடைய சிறப்பியல்புகளின் விளைவு ஆகாது. இந்தியக் கலை மரபில் ஒவ்வொரு கால கட்டத்திற்குமான தரத்தில் காணப்படும் மாற்றங்கள் அவ்வக்கால கட்ட மக்களினது இயல்பான இன, மனோபாங்கு, வீரியம், ரசணை சம்பந்தமான மாற்றங்களையே பிரதிபலிக்கின்றது.







தத்துவ ஞானிகள் அல்லாத பிறர் எவருமே அழகியற் கோட்பாட்டை ஆராயாத இந்தியாவில் சிற்பம், ஓவியம் போன்ற கலைகள் எல்லா மக்களும் இடம் பெற்ற அன்றாட சூழலிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்றியமையாத பண்பாக விளங்கியதினாற்றான் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் இந்தியக் கலை மரபானது இன்றும் வாழ்க்கையினின்றும் பிரிக்க முடியாதளவிற்கு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று ஆக்கப்படும் இந்தியக் கலை வடிவங்களுள் பெரும்பாலானவை குரு சீட முறைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிராந்திய இன, குண – வம்ச ரீதியான குணவியல்புகளை உடையதாக காணவும் முடிகின்றது.






உசாத்துணை நூல்கள்
1. தென்னிந்திய சிற்பக்கலை நிபுணர்கள் - க.நவரத்தினம்
2. சிவானந்த நடனம் - ஆனந்தகுமாரசுவாமி
3. இலங்கையிற் கலை வளர்ச்சி - க.நவரத்தினம்
4. இந்தியக்கலைக்கோர் அறிமுகம் - கலையோகி ஆனந்தகுமாரசுவாமி
5. இந்தியப் பண்பாட்டு வரலாறு - N.சுப்பிரமணியம

  கிழக்கிலங்கையின் தொன்மையை பறைசாற்றும்                         திருமங்கலாய் -சிவனாலம். கள ஆய்வுத்தொகுப்பு   கிழக்கிலங்கையில் திருகோணம...